Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மலைக்கோட்டை: திருச்சி இ.பி.ரோடு விறகு பேட்டை, பாரதி நகரை சேர்ந்தவர் ஸ்ரீ சாம் (வயது 13). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி மாலை சக நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள முருகேசன் என்பவரது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருக்கும்போது மண்சட்டியில் கூட்டாஞ்சோறு ஆக்குவதற்காக மண்சட்டியை பற்ற வைப்பதற்காக கிருமிநாசினியை ஊற்றி தீ பற்ற வைத்துள்ளான்.
அப்போது திடீரென தீப்பிடித்ததில் ஸ்ரீசாமின் உடலில் தீக்காயம் ஏற்பட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.